LOADING

Type to search

இலங்கை அரசியல்

2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்டகௌசல்யன், சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

Share

பு.கஜிந்தன்

2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்டகௌசல்யன், சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று 08.02.2024 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில் கொக்குவிலில் இடம்பெற்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ப.தர்சானந், வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான அ.ஜோன் ஜிப்பிறிக்கோ, திருமதி. சி. மரியறோசறி (செல்வி), ரமணன் மற்றும் வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபை உறுப்பினரான திருமதி வதனி காந்தராசா மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலியினை செலுத்தினர்.

நிகழ்வில் அகவணக்கம், சுடரேற்றல், மலரஞ்சலி, புகழுரை என்பன இடம்பெற்றன.