LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென வடக்கு கிழக்கு, மலையக தமிழ் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் லக்ஸ்மன் கிரியெல்ல, சஜித் பிரேமதாச ஆதரவு சுமந்திரன் தலைமறைவு

Share

19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை திடீரென நடத்தின. இந்த உற்சாகமான செயற்பாடு பெரும்பான்மை இன உறுப்பினர்களை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது.

வெடுக்குநாறிமலை சிவன் கோவில் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது . மதச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வடக்கு கிழக்கு, மலையக தமிழ் கட்சிகள் ஆர்பாட்டம் செய்த போது லக்ஸ்மன் கிரியெல்ல, சஜித் பிரேமதாச ஆதரவு ஆகிய சிங்களத் தலைவர்களும் தங்கள் ஆதரவை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து தலைமறைவானார் என்றும் அறியப்படுகின்றது. இந்த போராட்டத்தின்போது சஜித் பிரேமதாச அவர்கள் சிங்கள் உறுப்பினர்களுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது