LOADING

Type to search

இலங்கை அரசியல்

திருட்டுத்தனமாக மாடுகளைக் கடத்திய பொலிஸ் ‘திருடன்’ உட்பட மூவர் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

Share

2024.04.04 அன்று வியாழக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் திருடன் உட்பட மூவர் திருட்டுத்தனமாக 08 மாடுகளைக் கடத்திக் கொண்டு செல்லும்பொழுது யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும்பொழுது பண்ணையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.