LOADING

Type to search

விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்கா புளோரிடா மைதானத்தில் கனடா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

Share

இந்திய அணி டி20 உலகக் கோப்பை முதல் சுற்றில் முதல் மூன்று போட்டிகளை அமெரிக்கா நியூயார்க் மைதானத்தில் விளையாடியது. இந்த மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எனவே இந்திய கேப்டன் மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினார். மேலும் குல்தீப் யாதவ் பேட்டிங் வரிசையை நீட்டிக்க செய்வதற்காக வெளியில் வைக்கப்பட்டார். அதேசமயத்தில் இதற்கு அடுத்து நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் எல்லா போட்டிகளையும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாட இருக்கிறது. அங்கு நிச்சயம் குல்தீப் யாதவ் விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே முகமது சிராஜ் வெளியில் வைக்கப்படலாம். எனவே இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தயாராவதற்காக, வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ள வீரர்களுக்கு கனடா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் குல்தீப் யாதவ் கனடா அணிக்கு எதிரான போட்டியில் முகமது சிராஜ் இடத்தில் விளையாடலாம். ஏழு பேட்ஸ்மேன்களை மட்டும் வைத்து, ரவீந்திர ஜடேஜா இல்லை அக்சர் படேல் இடத்தில் சாகலை விளையாட வைக்கவும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதேபோல் அணியில் ஏழாவது பந்துவீச்சு ஆப்ஷனாக இருக்கும் சிவம் துபேவுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து, சாம்சனுக்கு டச்சில் இருப்பதற்காக ஒரு வாய்ப்பு தரப்படலாம். ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவுதான். மேலும் ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க வாய்ப்பு கிடையாது. கனடா அணிக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், சிவம் துபே,ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்,ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ், மற்றும் பும்ரா.