LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயரிழந்த 15 வயதுச் சிறுவன்!

Share

பு.கஜிந்தன்

23-06-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில், 15 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவனுக்கு 21 -06-2024 திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்துள்ளார்.

குடல் அலேர்ஜி நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.