LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்தியாவிலிருந்து காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்த சுற்றுலாக் கப்பல்!

Share

பு.கஜிந்தன்

இந்தியா – சென்னையிலிருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று 19-07-2024 அன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது 19-07-2024 அன்று காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலானது 17-07-2024 இலங்கை – ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து 18-07-2024 அன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த கப்பலானது வெள்ளி பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.