LOADING

Type to search

இலங்கை அரசியல்

பலரது பாராட்டை பெற்ற “களம் தந்த களங்கம்” தென்மோடிக்கூத்து!

Share

குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக்கழகம் நடத்திய குருநகரின் மூத்த குருக்கள் கௌரவிப்பு நிகழ்வும் “களம் தந்த களங்கம் “தென்மோடிக்கூத்து நிகழ்வும் கடந்த 29ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் குருநகர் கலையரங்கில் குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளாரின் தலைமையிலும் குருநகர் இளைஞர் கலைக்கழக நிர்வாகி கிளமென்ட் நெல்சன் அவர்களது ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், குருநகரை சேர்ந்த அருட்தந்தையர்களான அருட்பணி ஜெயசீலன் அடிகளார்,

அருட்பணி ஒல்பன் இராஜசிங்கம் அடிகளார், அருட்பணி இருதயதாஸ் அடிகளார், ஆகியோரும், குருநகரை சேர்ந்த கலைஞர்களான திரு.கலையார்வன், குருசுமுத்து இராயப்பு, திரு. கலைஞானச்செல்வன் அரியநாயகம் அன்றுயூலியஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து குருநகர் இளைஞர் கலைக்கழகம் தயாரித்து வழங்கிய களம் தந்த களங்கம் தென்மோடிக்கூத்து மேடை ஏற்றப்பட்டது. இக்கூத்தானது கலையார்வன் கு. இராயப்பு அவர்களது எழுத்துருவிலும் திரு அ.அன்றுயூலியஸ் அவர்களது நெறியாள்கையிலும் மேடை ஏற்றப்பட்டது.

குருநகரை சேர்ந்த இளம் கலைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள் இக்கூத்திலே நடித்து பாராட்டை பெற்றனர். 2மணித்தியாலங்களை கொண்டு புனித யாகப்பரின் புதுமையினை அடிப்படையாக கொண்ட கதையாக இக்கூத்து அமைந்திருக்கிறது.

கடினமான கூத்து இராகங்களை எல்லாம் எதிர்கால சந்ததிக்கு கடத்தும் இவர்களது பணிக்கு பலர் பாராட்டை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

–பு.கஜிந்தன்- JAFFNA