LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் விக்கிரமபாகு கருணரட்னவை நினைவுகூரும் நிகழ்ச்சி

Share

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகத் தென் இலங்கையிலிருந்து குரல்கொடுத்து வந்த கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன அண்மையில் அமரத்துவம் அடைந்துள்ளார். நவ சம சமாஜக் கட்சியின் தலைவரான அவர் தமிழ் மக்களுக்காக ஜனநாயக ரீதியாகப் பல போராட்டங்களை முன்னெடுத்த ஒருவர்.

அவரை நினைவுகூரும் நிகழ்ச்சி 4ஆம் திகதி (04.08.2024 ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலி சிவன் வீதியில் அமைந்துள்ள பிறைற் இன் (Bright Inn) திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நினைவுகூர் நிகழ்ச்சியில் தென்னிலங்கையிலிருந்து நவ சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் ரணத் குமார சிங்க கலந்து கொள்கிறார். இவருடன் சமூக அரசியற் செயற்பாட்டாளர் திரு. ம. செல்வின் இரேனியஸ் உம் பங்கேற்கவுள்ளார்.