LOADING

Type to search

இலங்கை அரசியல்

வீட்டில் நித்திரையில் இருந்த 5 வயது குழந்தையைக் கடத்த முயன்றவனை மடக்கிபிடித்த பொதுமக்கள் – வாகரையில் சம்பவம்

Share

. (கனகராசா சரவணன்)

வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரன் ஒருவன் கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற குழந்தையை மீட்டதுடன் கடத்தல் காரணை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து நப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் 17ம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதுடன் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என பொலிசாhர் தெரிவித்தனர்

வாகரை 5ம் வட்டாரத்தைச் சோந்த 5 வயதுடைய மோகன் கிறீத்தி என்ற குழந்தை தாய் தந்தையுடன்; நித்திiயில் இருந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த குழந்தை பால் கேட்டதையடுத்து தயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை படுக்க வைத்துவிட்டு சமையலறைக்கு சென்று பால் போத்துலுடன் திரும்பி வந்தபோது நித்திரையில்; இருந்த குழந்தையை காணாததையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு குழந்தையை தேடினர்

இதன் போது குழந்தையை கடத்தல் காரணன் ஒருவர் கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடிய நிலையில் குழந்தையை காட்டில் விட்டுவிட்டு கடத்தல் காரன் அந்த பகுதியில் ஒளிந்திருந்த நிலையில் அவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து நைப்புடைப்பு செய்து பொலிசாரிடம் ஒப்படைத்ததுடன் குழந்தையை மீட்டனர்.

இந்த சம்பவத்தைய்டுத்து அந்த பகுதியில் பெரும் பபரப்பு ஏற்பட்டதுடன் கைது செய்யப்பட்ட கடத்தல்காரன் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவன் எனவும் போதை பொருளுக்கு அடிமையானவன் எனவும் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டவன் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி பட்டியில் சேர்க்கப்பட்ட (ஜ.ஆர்.சி) எனவும் போதை பொருள் வாங்க பணத்திற்காக குழந்தையை கடத்தி கப்பம் பெற இருந்துள்ளார் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவனை எதிர்வரும் 23 ம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.