LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி வளர்ப்பு நாய் கையில் கடித்துள்ளது. இந்நிலையில் அவர் இந்த மாதம் 13ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பக்றீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தோல் வியாதி ஏற்பட்டு 26-08-2024 அன்று அதிகாலை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.