LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் கார் மோதி முதியவர் பரிதாபமாக உயரிழப்பு!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தில் கார் மோதி முதியவர் ஒருவர் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு, இருபாலை என்ற முகவரியில் வசித்து வந்து மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் யாழ். நகரில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றி வரும் நிலையில் கடந்த 25ஆம் திகதி இரவுநேர கடமையை முடித்து விட்டு, காலை 8 மணியளவில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அவரது வீட்டினை அண்மித்த வேளை வலது பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு செல்வதற்காக மத்திய கோட்டிற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தினார். இதன்போது அதே திசையில் வேகமாக வந்த கார் இவரை மோதித் தள்ளியது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 26-08-2024 அன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.