LOADING

Type to search

இலங்கை அரசியல்

மீண்டும் மீண்டும் தடைவிதித்தும் அதை மீறும் தமிழகத்து மீனவர்கள். எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணக் . கடலில் கைது!

Share

பு.கஜிந்தன்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே 07-09-2024 சனிக்கிழமையன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலிற்கு பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.