LOADING

Type to search

இலங்கை அரசியல்

சுமந்திரனின் அறிவிப்பால் யாழ்ப்பாணத்தில் சஜித்துக்கு வந்த சோதனை!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் 10-09-2024 அன்று முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர்.

நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரட்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்விகண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவிற்கு யாழ். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவின் பொதுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.