LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் பொதுநலனில் அக்கறை கொண்ட வர்த்தகத்துறை அன்பர்களைச் சந்தித்த முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி)

Share

கனடாவிற்கு தற்போது வருகை தந்துள்ள இளைப்பாறிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் (கவிஞர் ஆரணி) இங்கு பொதுநலனில் அக்கறை கொண்ட வர்த்தகத்துறை வெற்றியாளர்களைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அவர் சந்தித்த பிரமுகர்களில் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்அவர்களின் உயர் வகுப்பு ஆசிரியரான செந்தில்வடிவேல் அவர்கள், கணக்காளரும் அரசியல் செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி, கணக்காளரும் பாடகருமான தனம் அவர்கள். கணக்காளர் சாந்தகுமார் (குமார்) மற்றும் உதயன் சோதி என அழைக்கப்பெறும் பாஸ்டர் சோதி செல்லா ஆகியோர் , மார்க்கம் மூத்தோர் சங்கத்தின் தற்போதைய தலைவர் சுந்தரலிங்கம் அவரம்கள் ஆகியோர் இங்குள்ள படங்களில் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்அவர்களுடன் காணப்படுகின்றார்கள்.

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களிலும் உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர் என பல பதவிகளை வகித்து சிறந்த மக்கள் சேவை ஆற்றியவர் இவர்.
கவிஞர் ‘ஆரணி’ எனற புனை பெயர் கொண்ட அம்பலவாணர் சிவபாலசுந்தரன்அவர்களின்

‘நினைவிடைத்தோய்தல்’

கவிதை நூல் வெளியீட்டு விழா கனடா மார்க்கம் நகரில் நடைபெறவுள்ளது

இடம்:- Aaniin Community Centre, 5665 14th Avenue. Markham

காலம்:- 14-09-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம்

மேலதிக விபரங்களுக்கு 416 732 1608, 647 537 9235 என்னும் இலக்கங்களை அழைக்கவும்.

ARJUNE-Local Journalism Initiative Reporter.- 2