LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியேந்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நா.உ. கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சாரம் ஆரம்பம்

Share

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன், தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் 16-09-2024 அன்று திங்கட்கிழமை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில் 17ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரச்சார கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு மக்கள் அலைகடல் போல வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரச்சார நடவடிக்;கையை இன்று ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள்; கொண்ட குழுவினர் பொது வேட்பாளரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரச்சார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியுமு; இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த துண்டுபிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர்.