LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்து பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்திப் பேரணி!

Share

பு.கஜிந்தன்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப்பயணம் ஒன்று 15-09-2024 அன்றையதினம் நடத்தப்பட்டது.

குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளான அன்று (15-09-2024) முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் குறித்த பயணமானது பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை, “Roxeth recreation ground Ha2 8LF South Harrow ” இப்பயணம் நிறைவடைந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர் திரு.கேதீஸ்வரன் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.