இந்தியப் பிரதமர் இலங்கைக்கு நான்காவது தடவையாக வந்திருக்கிறார்.ஆனால் நான்கு தடவைகளும் அவர் நான்கு வேறு இலங்கை ஜனாதிபதிகளைச் சந்தித்திருக்கிறார்.ஆனால் இந்த நான்கு விஜயங்களின்போதும் மாறாத முக்கியமான விடயம் என்னவென்றால், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடுதான். இந்தியா தொடர்ந்தும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலான 13ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.13ஆவது ...
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் கோப்பாய் மிக முக்கியபகுதியும் யாழ்ப்பாண நகரத்தின் விளிம்பு நகரமும் ஆகும். இதுமட்டும் அல்லாது கல்வியியற்கல்லூரி, கோப்பாய் ஆசிரியப்பயிற்ச்சிக்கல்லூரி என கல்விச்சிறப்புமிக்க தலங்களையும் கொண்டுள்ளது, இங்கு உள்ள பிரதேச வைத்தியசாலை முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இருப்பது இதன் முக்கியத்துவத்தையும் தேவையினையும் அதிகரிக்கின்றது ஏனெனில் யாழ்ப்பாண போதனா ...
ந.லோகதயாளன். வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள நிர்வாக மையங்களில் அதிகளவு சிங்களவர்களை நியமிப்பதில் தற்போதைய அநுர அரசும் அதி தீவிரம் காட்டுகின்றது. முன்னைய அரசாங்கங்களிலும் மிகவும் முனைப்பான முறையில் இந்த ‘திட்டத்தை’ அமுல் செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பாக முதலில் கிழக்கு மாகாணமே குறிவைக்கப்படுகின்றதோடு அது ...