வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 2023.11.08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது இளைஞன் பொலிஸாரின் அராஜகமான தாக்குதலால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 2023.11.19 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை தொடர்பில் ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி இம் முறையும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி நடைபெறும் மலர் முற்றம் காட்சித்திடல் நாளை புதன் கிழமை (22.11.2023) பிற்பகல் ...
அனுராதபுரத்தில் 19.11.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அகில இலங்கை தேசிய மட்டத்திலான பெண்களுக்கான தேயிலை கொழுந்து நடனப் போட்டியில் வட்டு இந்து கல்லூரி மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இவர்கள் வலய மட்டம், மாவட்ட, மாகாண மட்டங்களில் தெரிவாகி தேசிய மட்டத்தில் முதலிடம் ...