சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக மண்டபத்தில் “இயற் தமிழ் வித்தகர்” என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பெற்ற கனடா விணைமைந்தன்
Share
கடந்த 23-03.2026 திங்கட்கிழமை அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக 2ம்தளம் கவிஞர்களாலும், எழுத்தாளர்கள், கல்வியாளர்களாலும் நிரம்பி வழிந்தது.
கவியரசு கண்ணதாசன ; தமிழ்சங்கம் (பம்மல்) பெருமையடன் நடத்திய வீணை மைந்தன் எழுதிய ‘நடிகர் திலகம் சிவாஜியும். தமிழ் சினிமாவும்’, ‘சினிமாவில் பாரதி பாடல்கள்’ ஆகிய இரு நூல்களுடன், எழுத்தாளர், பேச்சாளர் திரு. அந்தமான் கிருஸ்ணமூர்த்தி எழுதிய ‘கற்போம் கம்பனில் அணி இலக்கணம்” மற்றும் கவிஞர் காவிரி மைந்தன் எழுதிய ‘உலகெங்கும் ஒரே மொழி” என நான்கு நூல்களின் வெளியீடும், மதிப்புரை வழங்கியும் மிகவும் சிறப்பானதொரு இலக்கிய விழா அரங்கம் நிறைந்த சபையினர் மத்தியில் அரங்கேறியது.
சென்னையில் திருமிகு சிவாஜி ரவி என யாவரினாலும் மதிக்கப்பெறும் சமூகசேவகரும், நடிகர் திலகத்தின் பேரில் அறக்கட்டளையை நிறுவி பல்வேறு கலை, சமூகத் தொண்டுகளை ஆற்றி வருபவருமான அவரது தலைமையில் விழா ஆரம்பமானது.
முதலில் கனடிய எழுத்தாளர் திரு. வீணைமைந்தன் எழுதிய ‘நடிகர்திலகம் சிவாஜியும் தமிழ் சினிமாவும்’ நூலை. . சிவாஜி ரவி அவர்கள் வெளியிட நூலைப் பெற்று மதிப்பரை வழங்கினார். முனைவர் தென்காசி கணேசன் அவர்கள். இரண்டாவது ‘தமிழ்ச் சினிமாவில் பாரதி பாடல்கள்;’ என்னும் நூலை தொழிலதிபர் வர முரகன் அவர்கள் வெளியிட; ‘குமுதம் சிநேகிதி’ தொடர் எழுத்தாளர் திருமதி கல்யாணி ஸ்ரீதர் மதிப்புரை வழங்கிச் சிறப்பித்தார்.
அடுத்து அந்தமான் கிருஸ்ணமூர்த்தி எழுதிய ‘கற்போம் கம்பனின் அ ணி இலக்கணம்’ நூலை திரு. அமுதா பாலகிருஸ்ணன் வெளியிட மனோதத்துவ நிபுணர் ஸடீபன் ராஜ் அவர்கள் மதிப்புரை வழங்கியும் , ளட கவிஞர் காவிரி மைந்தன் அவர்கள் எழுதிய; உலகமெங்கும் ஒரே மொழி’ கவிதை நூலை திரு கீத காந்தி பெற்றுக்கொள்ள துபாய் கவிஞர் திருமதி நர்கிஸ் பானு மதிப்புரை வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து, வாழ்த்துரைகளை மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் அவர்களும் பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் காப்பாளரும் கவிஞருமான வா. மு. சே. திருவள்ளுவர் அவர்களும் ‘கலைமாமணி’ ஏர்வாடி ராதாகிருஸ்ணன் அவர்களும் வழங்க தொடர்ந்து நூல்கள் வெளியீடும் மதிப்புரைகளும் சிறப்பாக இடம்பெற்றன.
விழாவின் இறுதியில் கனடா வாழ் கவிஞரும் எழுத்தாளருமான வீணைமைந்தன் அவர்களுக்கு சிவாஜி ரவி அரவர்கள் தலைமையில் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் மற்றும் ‘கவிதை உறவு ஆகிய நிறுவனங்களின் சார்பில் கல்வியாளர்கள், சான்றோர்கள், கவிஞர்கள் மற்றும் பலர் இணைந்து வீணைமைந்தன் சணமுகராஜா அவர்களுக்கு ‘இயற் தமிழ் வித்தகரம்’ என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்கள். அப்போது அனைவரும் ஒன்றாக இணைந்து ‘இயல் தமிழ் வித்தகர்’ வீணைமைந்தன் என்று மூன்று தடவைகள் வழங்கிய வாழ்த்தொலி அந்த விழா அரங்கில் எதிலொதித்தது.
இந்த விழா கனடா வாழ் கவிஞர் ‘வீணைமைந்தன்’ சண்முகராஜா அவர்களுக்கு எடுக்கப்பெற்ற பெருவிழா என்றே சொல்லலாம்.!















