LOADING

Type to search

இலங்கை அரசியல்

தியாகி அன்னை பூபதி அம்மாவின் திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து ஆரம்பம்!

Share

பு.கஜிந்தன்

அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் – தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இவ்வாறு புறப்பட்ட ஊர்தியானது வடக்கு – கிழக்கு முழுவதும் ஊர்வலமாக வந்து, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.

பின்னர் அங்கு இறுதி நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.