LOADING

Type to search

சினிமா

ரவி தேஜாவின் “இருமுடி கட்டு” படம் முதல் வாரத்தில் ரூ135 கோடி வசூலித்துள்ளது

Share

ரவி தேஜாவின் “இருமுடி கட்டு” படம் முதல் வாரத்தில் ரூ135 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். ரவி தேஜாவின் 77-வது திரைப்படமான ‘இருமுடி கட்டு’ படம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ‘மஜிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘இருமுடி கட்டு’ படத்தில், ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் ரவி தேஜா நடித்துள்ளார். ஆன்மிகம், உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கலந்த இந்தப் படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி தேஜாவின் வித்தியாசமான கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சிறு கிராமத்து குழந்தைகளின் பாலியல் சீண்டல்கள் குறித்து உணர்சிகரமாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் முதல் பாடலான ‘இருமுடி கட்டு’ பாடலை அனந்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவ நிர்வாணா மற்றும் கல்யாண் சக்ரவர்த்தி இணைந்து எழுதியுள்ளனர்.‘வில்லாதி வில்லனே’ என்ற சாமி பாடல் திரையரங்குகளில் மிகுந்த கவனம் பெற்றுவருகிறது. இந்நிலையில், ரவி தேஜா நடித்த ‘இருமுடி கட்டு’ படம் முதல் வாரத்தில் ரூ. 135 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.