LOADING

Type to search

இலங்கை அரசியல்

பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம்.

Share

பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சனங்களை தீவிரமாக எழுதி வந்தவருமான ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தியொன்று தெரிவிக்கின்றது.

இவ்வாறு ‘குறி’ வைக்கப்பட்டுள்ள மேற்படி வடபகுதி புளட் தலைவர் தராக்கி சிவராம் தொடர்பாக கடந்த வாரம் கொழும்பில் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளர் தராக்கி அவர்களும் ‘புளட்’ இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயற்பட்டவர் என்ற வகையில் அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நட்பு மற்றும் கசப்பான அனுபவங்கள் ஆகியவை தொடர்பாகவும் கொழும்பில் தராக்கி கொலை செய்யப்பட்ட அன்று கொழும்பில் தங்கியிருந்த ஏனைய புளட் உறுப்பினர்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.