LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மொழி கல்வி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Share

மன்னார் நிருபர்

(13-10-2024)

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வடமாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 150 மணித்தியால பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு சனிக்கிழமை (12-19-2024) மன்னார் நகரசபை மண்டபத்தில் சிரேஸ்ர மொழிப்பாட தேசிய வளவாளர் E. சாகரிகா பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது.

2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 2024 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட அதிபர் மன்.முருங்கன் மத்திய கல்லூரி திரு.தொம்மை இருதய ராசா குரூஸ் மன்னார் மாவட்ட. கிராம அலுவலர் பிரிவின் தலைமை உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார. உத்தியோகத்தர் மற்றும் இரண்டாம் மொழி பாட வளவாளர் சுபாஜினி விநாயகமூர்த்தி ,தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு இணைப்பாளர் சிந்துஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

அதே நேரம் புதிய சிங்கள பாடநெறி ஆனது வருகின்ற மாதம் ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது