LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு

Share

-பல இலட்சக்கணக்கான சிவ பக்தர்கள் பங்கேற்பு.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

26.02.2025

வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு 26ம் திகதின்று புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்த வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இலங்கை மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை அன்று (26) அதிகாலை தொடக்கம் செலுத்தினர்.

மேலும் மகா சிவராத்திரி நிகழ்வை ஒட்டி விசேட போக்குவரத்து சேவைகள்,குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் முன்னெடுக்கப்பட்டது .

அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்றன..

அன்றைய தினம் இரவு விசேட பஜனைகள் மற்றும் நிகழ்வுகளும் இடம் பெற்றன

அதே நேரம் இம்முறை சிவராத்திரி நிகழ்வுக்கு என விசேட பொலிஸ்,இராணுவ அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது டன் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.