The Government of Canada introduces Citizenship by descent Legislation for Canadians
Share
கனடா அரசாங்கம் கனடியர்களுக்கான வம்சாவளி குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது
கனடிய குடியுரிமை என்பது கனடியராக இருப்பதில் உள்ள அர்த்தத்தை இதயசுத்தியோடு புரிந்து கொள்வதில் தங்கியுள்ளது, இது ஒரு பன்முகத்தன்மையை, உள்ளடக்கிய மற்றும் ஜனநாயக தேசத்துடன் இணைந்திருப்பதற்கான உணர்வையும் தொடர்பையும் வழங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே . கனடாவிற்கு புதிதாக வருபவர்கள் பலருக்கு, குடியுரிமை ஒருங்கிணைப்புக்கு என்பது முக்கியமாகும், மேலும் குடியுரிமை செயல்முறையை முடிந்தவரை நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்ற கனடிய அரசாங்கத்தின் சார்பில் உறுதிபூண்டுள்ளோம்.
வெளிநாட்டில் பிறந்த தனிநபர்களுக்கான வம்சாவளி குடியுரிமைக்கான முதல் தலைமுறை வரம்பின் விளைவாக, வம்சாவளி குடிமக்களாக இருக்கும் பெரும்பாலான கனேடிய குடிமக்கள் கனடாவிற்கு வெளியே பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட தங்கள் குழந்தைக்கு குடியுரிமையை வழங்க முடியாது. தற்போதைய முதல் தலைமுறை குடியுரிமைக்கான தகைமைகள் கவனிக்கப்படவுள்ளன, இன்று கனேடிய குடும்பங்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதும் மற்றும் நமது நாட்டை வரையறுக்கும் மதிப்புகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதும் இந்த புதிய சட்டத்தின் ஊடாக நாம் நிலை நாட்ட விரும்புகின்றோம். .
5ம் திகதி வியாழக்கிழமை கனடிய பாராளுமன்றத்தில் கனடிய , குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் மாண்புமிகு லீனா மெட்லேஜ் டயப், முதல் தலைமுறையைத் தாண்டி வம்சாவளி குடியுரிமையை உள்ளடக்கியதாகவும், கனேடிய குடியுரிமையின் மதிப்பைப் பாதுகாக்கும் வகையிலும் நீட்டிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
“மசோதா C-3 என்ற அடையாளத்தோடு அறிமுகம் செய்த இந்த மசோதாவில். முதல் தலைமுறை வரம்பு அல்லது முந்தைய குடியுரிமைச் சட்டத்தின் சில காலாவதியான விதிகள் இல்லாவிட்டால், இன்று குடிமகனாக இருக்கும் எந்தவொரு நபருக்கும் தானாகவே கனேடிய குடியுரிமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கும் .
கனேடிய பெற்றோரின் குழந்தை பிறப்பு அல்லது தத்தெடுப்புக்கு முன்னர் குறைந்தபட்சம் 1,095 ஒட்டுமொத்த நாட்கள் (அதாவது, மூன்று ஆண்டுகள்) கனடாவில் உடல் ரீதியாக இருப்பதன் மூலம் நிரூபிக்கப்பட்ட கனடாவுடனான கணிசமான தொடர்பின் அடிப்படையில், முதல் தலைமுறைக்கு அப்பால் குடியுரிமையை அணுக அனுமதிக்கும் ஒரு புதிய கட்டமைப்பை எதிர்காலத்தில் நாம் உறுவாக்குவோம்.
குடியுரிமைச் சட்டம் (2025) ஐத் திருத்துவதற்கான ஒரு சட்டமான பில் C-3 இல் முன்மொழியப்பட்ட மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய மக்கள், இது அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் என்ன வகையில் பாதிப்பு என்பது குறித்து சந்தேகங்களை எழுப்புவார்கள். அதையும் நாம் பரிசீலிப்போம். மேற்படி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அரச ஒப்புதலைப் பெற்றால், இந்த மாற்றங்களை நடைமுறைக்குக் கொண்டுவர நாங்கள் விரைவில் செயற்படுவோமட், மேலும் எங்கள் வலைத்தளத்தில் தகுதியான நபர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குவோம்.”இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்




















