தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி மரணம்
Share
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த சில மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலை ரேணுகாதேவி காலமானார்.




















