LOADING

Type to search

இந்திய அரசியல்

காஷ்மீர்: பனிப்புயலில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Share

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கோகர்நாக் பகுதிக்கு உட்பட்ட கிஷ்த்வார் சரகத்தில் கடும் குளிருக்கு இடையே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீரர்களான பலாஷ் கோஷ் மற்றும் சுஜய் கோஷ் ஆகிய இருவரும் கடும் குளிரில் சிக்கினர். பனிப்புயலில் சிக்கிய அவர்களை தேடும் பணி தீவிரமடைந்தது. எனினும், இருவரின் உயிரற்ற உடல்களையே வீரர்கள் மீட்டனர். இதுபற்றி இந்திய ராணுவம் வெளியிட்ட செய்தியில், அவர்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் எங்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும். அவர்களுடைய உயரிய தியாகத்திற்கு ராணுவம் மதிப்பளிக்கிறது என தெரிவித்து உள்ளது. வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம். அவர்களின் நலனுக்காக நாங்கள் செயல்படுபோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வந்து ராணுவ சேவையில் ஈடுபட்டு வந்தனர். பனிப்புயலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர் என்றார்.