LOADING

Type to search

இலங்கை அரசியல்

கண்டாவளை பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த அவசிமான கலந்துரையாடல்

Share

கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் 18ி-11-2025 அன்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.சந்திரசேன, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கனிய வளத்திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தவது தொடர்பாகவும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.