LOADING

Type to search

சினிமா

அஜித்துடன் செல்பி எடுத்தது குறித்து ஆனந்த கண்ணீர் – மலேசிய ரசிகை

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24எச் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த காணொளியில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு” என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.