யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!
Share
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்தவகையில் கடந்த 5ம் திகதியிலிருந்து இருநாட்கள் ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன.
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் மக்கள் அவற்றை எடுக்காத படியால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




















