இலங்கையில் அரச திணைக்களங்களில் சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் பேணியமைக்கான விருதுகள் – 2025
Share
மன்னார் மாவட்டச் செயலகம் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டது
இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public Finance Accountants of Sri Lanka – APFASL) மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 வழங்கும் விழா, 5ம் திகதி வியாழக்கிழமை அன்றய தினம் 2026 பெப்ரவரி 5ஆம் திகதி BMICH – சிறிமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
பொது துறை நிறுவனங்களில் நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் சிறந்த கணக்கியல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருட விழாவில் மன்னார் மாவட்டச் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக விருதை பெற்றுக்கொண்டது. இது மாவட்டச் செயலகத்தின் நிதி ஒழுங்கு, தரமான வருடாந்த அறிக்கை தயாரிப்பு மற்றும் நல்லாட்சி நடைமுறைகளுக்கான உறுதியை வெளிப்படுத்தும் முக்கியமான சாதனையாகும்
இவ்விழாவில் பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர் கௌரவ. நிஷாந்த ஜயவீர அவர்கள் பிரதம விருந்தினராகவும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் திரு. அலோக பண்டார அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். பொது துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மன்னார் மாவட்டச் செயலகம் பெற்றுள்ள இவ்வெற்றி, அனைத்து அலுவலர்களின் ஒற்றுமையான முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டு அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும்.




















