LOADING

Type to search

சினிமா

துருவ நட்சத்திரம் படம் குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதிவேற்றம்

Share

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் – நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “துருவநட்சத்திரம்”. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் வெளியீடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்தப் படம் இருக்கிறது. சட்டரீதியிலான சிக்கல்கள் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் “துருவநட்சத்திரம்” பட பிரச்சினை குறித்து புதிய தகவல் கொடுத்துள்ளார். அதன்படி இந்தப் படத்திற்கு இருந்த சட்டரீதியிலான பிரச்சினைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசும் போது, “2018ஆம் ஆண்டு இந்தப் படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும், படத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே அதிக காலம் கடந்துவிட்டது. எங்களுக்கு பணத்தேவை இருந்ததால், இந்தப் படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது.” “படத்தின் வெளியீடை ஒட்டி நாங்கள் சில சட்டரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரேயொரு பிரச்சினை தான் மீதமுள்ளது. வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும்,” என்றார். முன்னதாக திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் இசைக் கச்சேரியில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் மேனன், படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறியிருந்தார். தற்போது படத்தின் பிரச்சினைகள் முடிந்துள்ளதாக கூறியிருப்பதை அடுத்து விரைவில், “துருவநட்சத்திரம்” படத்தின் புதிய வெளியீடு தேதியை எதிர்பார்க்கலாம்.