கிராமத்துவதனம்’ ஒன்றாரியோ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ‘அனைத்துலக பெண்கள் தினம்’ கொண்டாடப்பெற்றது
Share
இன்று 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈற்றோபிக்கோ நகரில் ‘கிராமத்துவதனம்’ ஒன்றாரியோ தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ‘அனைத்துலக பெண்கள் தினம்’ கொண்டாடப்பெற்றது.
அங்கு கனடா வாழ் 62 தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள். தாம்’பிறந்த பதி’ அல்லது ‘புகுந்த பதி’ பற்றி எழுதிய 62 சிறப்பான கட்டுரைகள் அடங்கிய ‘மண்ணின் மணமும் மங்கையர் நினைவுகளும்’ என்ற பெயர்கொண்ட தொகுப்பு நூல் வெளியிடப்பெற்றது.
மேற்படி தொகுப்பு நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளை எழுதிய பெண்கள் அனைவரும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் அலுவலகத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட MICHELLE TELFEYAN அவர்களோடும் கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர் ஆகியோரோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட படம் இங்கு காணப்பெறுகின்றது




















