எமது எல்லைக் கிராமங்களை சிங்கள மயமாக்கும் திட்டத்துக்கு வடக்கில் சுமந்திரன்,கிழக்கில் சாணக்கியன் ஆகியோர் ஆதரவா? என கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி!
Share
மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன் கொண்டு வரவில்லை? வடகில் எம்.சுமந்திரன் போல கிழக்கில்; இரா.சாணக்கியன் இங்கு உள்ள ஏனைய நா.உறுப்பினர்களை வெருட்டி அடக்கி இந்த சிங்களமயமாக்கலுக்கு துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமக்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு எல்லை கிராமான வடமுனை ஊத்துச்சேனை கிராம மக்களை சந்திக்கும் நிகழ்வு 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (10) கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஊத்துச்சேனையில் இடம்பெற்றது. இதில் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் .நா.உறுப்பினர் செ.கஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தீவு பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சிங்கள தலைவர்கள் வடகிழக்கு பிரதேசங்கள் பெரும்பான்மை தமிழ் பேசும் இடங்களாக இருப்பதை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றனர்
தங்களுடைய மகாவம்சம் ஆவணத்தில் சிங்கள மக்களுக்கு புத்த பெருமான் இந்த பௌத்த மதத்தை தூய்மையாக பாதுகாக்க சொல்லி தங்களுக்கு ஒரு பணியை வழங்கி இருப்பதாகவும். அந்த வகையில் பௌத்த மதத்தை இலங்கை தீவில் சிங்கள மக்கள் தூய்மையாக பாதுகாப்பதாக இருப்பதற்கு அதன் தூய்மை தன்மையை உறுதிபடுத்துவதாக இருந்தால் இந்த தீவில் எந்த ஒரு பகுதியும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வகையில் இருக்க கூடாது.
அதேவேளை மொத்த இலங்கையும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தம் அவர்களிடம் உருவம் பெற்றது அந்த நிமிடத்தில் இருந்து வடகிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற காரணத்தினால் சர்வதேச சட்டத்தின் படி ஒரு மக்கள் கூட்டத்திற்கு தனித்துவமான கலாச்சாரம். மொழி, நிலப்பரப்பு, பொருளாதாரம், இந்த 4 அம்சங்களுக்கு உரித்தானவர்களாக ஒரு இனம் இருந்தால் அந்த இனத்திற்கு தேச அந்தஸ்து சர்வதேச சட்டம் வழங்கும்.
தேசம் என்ற மக்களுக்கு சுயாட்சி உரிமை கிடைக்கும் அந்த வகையில் வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களுக்கு எதிர் காலத்தில் தேச அந்தஸ்து பெற கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் எனவே இலங்கை தீவில் தூய்மையான சிங்கள பௌத்தத்தின் ஒரு தீவாக இருக்கப் போவதில்லை.
ஆகவே புத்த பெருமான் கொடுத்து பணிவந்து சறுக்கும் எனவே தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது. என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.
அந்த குடியேற்றங்கள் தென் தமிழ் தேசத்தில் கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக முன் எடுக்கப்படுகின்றது கூடுதலாக அம்பாறை திருகோணமலை பிரதேசத்திலும் இந்த திட்டங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் குடியேற்ற வேலைத்திட்டம் மிக மோசமாக இருக்கிறது
கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாக சிங்கள மயப்படுத்துகின்றதற்கு கிழக்கு மாகாணத்தின் இதயமாக இருப்பது மட்டக்களப்பு இதனை நேரடியாக மாற்றுவது மிகவும் கஷ்டம் எனவே கிழக்கு மாகாணத்தின் இரண்டு எல்லைகளை முற்று முழுதாக சிங்கள மயமாக்கல்.
அம்பாறையையும் திருகோணமலையையும் அதில் இருந்து படிப்படியாக முன்னேறி மட்டக்களப்பை தனிமைபடுத்திய பின்னர் மட்டக்களப்பில் கை வைக்கலாம் என்ற ஒரு திட்டம்..
அதற்கு அமைய கிழக்கின் இரண்டு எல்லைகள் சிங்கள மயமாக்கல் போர் காலத்திற்கு முதல் இந்த வேலைத்திட்டம் முடிந்தது. அந்த நிலையில் தான் தமிழ் மக்கள் தங்கள்; பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டரீதியாக எங்கள் உரிமையை பெற்றெடுக்க சமஷ்டி தீர்வு.
தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஸ்டி தீர்வை வழங்க வேண்டும் அல்லது பிரிந்தாவது போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் அரசியலில் 1977 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தனா.;
அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெரியளவில் குடியேற்றம் செய்ய முடியவில்லை ஆனால் 2009 க்கு பின்னர் போராட்டத்துக்கு ஒட்சிசனாக இருந்த மக்களை அழித்து இனழிப்பை செய்த பின்னர் இன்று மட்டக்களப்பில் கையை வைக்க ஆரம்பித்துள்ளனர் இது தான் உண்மை
கிழக்கில் விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கட்டதையடுத்து மாவட்டத்தை சிங்கள மயப்படுத்த இந்த மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையை கைப்பற்றுவதற்காக கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் ராஜபக்ச தரப்பு மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்தனர் இதன்போது சோளம் செய்கை என்ற பெயரில் கள்ள உறுதிகளை வழங்கி சட்ட விரோதமாக சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தினர்.
இதன்போது தான் பண்ணையாளர்கள் கால்நடைகளை கொண்டு செல்லும் போது குடியேறிய சிங்களர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது இவ்வாறு தான் மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஊத்துச்சேனை கிராமத்தையும் அதே வேலைத்திட்டத்துக்குள் கொண்டுவரப்படுகிறது.
எனவே மட்டக்களப்பில் நடக்கின்ற இந்த அநியாயங்களை கண்டும் காணாமல் இருந்தோமாயின் எல்லை மீறி போகும். நான் கேட்கின்றேன் மட்டக்களப்பில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் ஒரு ஜே.வி.பி கட்சி, ஹிஸ்புல்லா, தவிர்த்து எனைய 3 பேர் தமிழரசு கட்சி, இந்த 5 பேரில் 4 பேர் தமிழர்கள் இந்த 4 பேரும் இந்த கிராமத்தில் நடக்குகின்ற இந்த அநியாயத்தை கேட்க வில்லை?
மயிலந்தனை மாதவனை பிரச்சனையை கூட ஏன் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் தடவையாக வெளிக்கொண்டு வரவில்லை? தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மட்டக்களப்புக்கு வந்து இந்த பிரச்சனை முதல் தடவை கேட்கப்பட்டபோது அவர் அந்த இடத்துக்கு சென்று முதல் தடவையாக ஊடகத்துக்கு வெளிக்கொண்டு வந்தார்;.
ஏன் இங்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அநியாயத்தை ஏன் முன் கொண்டு வரவில்லை? சிங்கள மயப்படுத்துகின்ற வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு எல்லை வரைக்கும் கொண்டு போவதற்கு இந்த மண்ணை பிரதிநிதிப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன்? அமைதியாக இருந்தனர்.
அமைதியாக இருந்தால் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற செ.கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்து கதைத்தால் தேவையில்லாத பிரச்சனை கிளப்பிறதற்கு பொய்யை சொல்லி கொச்சைப்படுத்தி இன்னும் கொஞ்ச காலம் மூடி மறைக்கலாம் அது தான் நோக்கமாக இருக்கலாம்?
நானே கஜேந்திரனே இங்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை வாக்கு கேட்கப் போவதும் இல்லை ஆனால் அவர்கள்தான் வாக்கு கேட்கப் போகின்றனர் உங்கள் பிரச்சினையை முன் நின்று வெளிக் கொண்டு வர வேண்டியது அவர்கள் பொறுப்பு ஏன் நடக்கவில்லை? ஏன் என்றால் அவர்களும் இதற்கு முழுமையாக துணைபோகின்றனரா?
வடகில் இருக்கும் எம்.சுமந்திரன் போல கிழக்கில் இருக்கும் இரா.சாணக்கியன் வந்து இங்கு உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி அவர்களை அடக்கி இந்த சிங்களமயம் துணை போவதற்கு வந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா?
இங்கு ஏன் பிபி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு அடிமை, ஒரு சிங்கள கட்சியில் இனவாத கட்சியில் வந்துள்ளதால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது சிங்களமயம் பௌத்த மயத்துக்கு விலை போனவராக இருப்பார்.
யாழில்; அந்த மண்ணுடன் சம்மந்தப்படாத சந்திரசேகரனை கொண்டுவந்து நிறுத்திவிட்டு அவர்தான் ஆட்சி அங்கு இருக்க கூடியவர்களை மக்கள் தெரிவு செய்த ஒன்றும் இல்லாத 3 பேரை வைத்துக் கொண்டு சிங்கள மயப்படுத்துகின்ற விடையங்களை செய்கிறார். இங்கும் அதுதான்
நான் கேட்பது தமிழ் தேசியம் பேசி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களை பற்றி தான் நான் கேட்கின் றேன்?
உண்மையில் எல்லை பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை தக்க வைத்தால் மட்டும் தான் இந்த இடங்களில் இந்த மண்ணில் வாழ முடியும். இந்த மண்ணை விட்டுவிட்டு போவார்கள் ஆனால் இந்த காணி சுருங்கும் இந்த இடம் தொடர்ந்து தமிழாக இருக்கலமா?
எல்லையை பாதுகாப்பது என்றால் அந்த எல்லையில் இருக்க கூடியவர்களுக்கு வசதிகளையும் அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தால் மட்டும் தான் அவர்கள் நின்று பிடிப்பார்கள் எங்களது நோக்கம் அதுதான்
நாங்கள் உங்களை தேடி வருவதற்கான காரணம் எங்களுடைய அரசியல் தமிழ் தேசத்தை பாதுகாப்பதாக இருந்தால் எங்கள் எல்லைகள் பாதுகாக்க ப்பட வேண்டும் எல்லைகள் பாதுகாக்கபடாது இருந்தால் எங்கள் தேசத்தின் நிலப்பரப்பு சுருங்கும் அது தான் எதிரியின் விருப்பம் ஆகவே தான் நாங்கள் எங்கு மக்கள் பிரச்சனையாக இருக்கின்றனரே அங்கு தேடிச் சென்று அந்த பிரச்சனைகளை ஆக குறைந்தது வெளிக்கொண்டு வருவோம் என நாங்கள் உங்களுக்கு கொடுக்க கூடிய உத்தரவாதம் என்றார்















