LOADING

Type to search

உலக அரசியல்

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் 5 பேரை கைது செய்தனர்

Share

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் 5 பேரை கைது செய்தனர். இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு காரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக நேபாள காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேபாளத்தின் பொக்கரா நகரின் பஜுவா பகுதியில் உத்தரபிரதேச பதிவெண் கொண்ட காரை காவல்துறை மறித்து சோதனை செய்தனர். 

சோதனையில் காரில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த காவல்துறை, அதை கடத்தி வந்த உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிகஷ் குமார், பர்ஜில் பஸ்வான், அபே குமார், பிரீதம் குமார், பர்ஜில் பஸ்வான், அபே குமார், பிரீதம் குமார், அபிஷேக் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.