LOADING

Type to search

இலங்கை அரசியல்

“செம்மணிப் பேரவலத்துக்கு, இந்தியப்படையினரா, இலங்கை ஆயுதப்படைகளா அன்றி விடுதலைப்புலிகளா காரணம் என்பது விசாரணைகளின் இறுதியில் தெரியவரும்.”

Share

உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்கின்றார் இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷண

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணிப் பேரவலத்துக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்.” – என்றார்.