LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக ஆளுனராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Share

தமிழக ஆளுனராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் ஆளுனர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்து உள்ளன. கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆளுனர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் ஆளுனர் நியமனம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.