LOADING

Type to search

இந்திய அரசியல்

அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

Share

அமைச்சர் செங்கோட்டையன் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.  தமிழக சட்டசபை தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றி கழக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இதனையடுத்து செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், செங்கோட்டையனின் வேட்பு மனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.