LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கில் அதிகூடிய வெப்பநிலை காரணமாக வடமராட்சி கிழக்கில் மீன்கள் இறந்து மிதக்கின்றன!

Share

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடல் நீரேரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் இறந்த மிதக்கின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு பகுதியில் நன்னீர் மீன்பிடியை நம்பியுள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை இழந்துள்ளனர்.

அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எல் லினோ காலநிலை காரணமாக அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளமையால் பல்வேறு இடங்களிலும் நன்னீர் மீனினங்கள் இறந்து
மிதக்கிறமை குறிப்பிடத்தக்கது.