LOADING

Type to search

கனடா சமூகம்

கனடா ‘உதயன்’ பத்திரிகை நடத்திய வெள்ளி விழா ஞாபகார்த்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றன

Share

கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டாகத் திகழும் 2021 ம் ஆண்டின் இறுதி வரையிலும் மாதாந்தம் ஒரு நிகழ்வையென்றாலும் இணையவழி ஊடாக நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தின் படி ஏற்பாடு செய்யப்பெற்ற உலகளாவிய மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 27-02-2021 சனிக்கிழமையும் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமையும்

கனடிய நேரம் : காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது –
போட்டிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், உதயன் பத்திரிகையின் நிறுவனரும் பிரதம ஆசிரியருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது குழுவினரோடு இணைந்து செய்திருந்தார்..

மேற்படி பேச்சுப் போட்டிக்கான நடுவர்களாக பின்வரும் பெரியோர்கள் பணியாற்றினார்கள்.

பேராசிரியர் சங்கரநாராயணன்( தமிழ்நாடு), வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் (தமிழ்நாடு), குயின்றஸ் துரைசிங்கம் (கனடா), நிமால் விநாயகமூர்த்தி (கனடா), திரு வீணைமைந்தன் சண்முகராஜா (கனடா) ஆகியோர்.

போட்டியில் பங்கு பற்றுவதற்காக விண்ணப்பித்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இலங்கை, இந்தியா, மலேசியா, சுவிற்சலாந்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இணையவழி ஊடாக தங்கள் உரைகளை வழங்கினார்கள். பேச்சுப் போட்டிக்கு கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘நான் விரும்பும் அரசியல் தலைவர்’ என்பதாகும்.

‘கனடா உதயன்’ நடத்தும் வெள்ளிவிழா பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பித்து கடந்த 27ம் 28ம் திகதிகளில் இணையவழி ஊடாக பங்குபற்றிய அனைத்து மாணவ மாணவியர்கள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்று பணப்பரிசுகளைத் தட்டிக்கொண்ட அனைத்து தம்பி தங்கையர்க்கும் நன்றி…

மேற்படி போட்டிக்காக கனடா உதயன் பத்திரிகை அறிவித்த பரிசுத் தொகையிலும் மேலாக, பேச்சுப் போட்டியின் நடுவர்களில் ஒருவரும், கணக்காளருமான திரு நிமால் விநாயகமூர்த்தி அன்பளிப்பாக வழங்கிய 50 கனடிய டாலர்கள் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வங்கிக் கணக்குகள் மூலமாக அனுப்பபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் 28ம் திகதி போட்டி நிறைவுற்ற பின்னர் நடுவர்களின் ஆலோசனையின் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பெற்றன. மூதல் மூன்று பணப் பரிசுகளோடு ஏழு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பெற்றன. இங்கே காணப்படும் படங்களில் உலகளாவிய பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்ற தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரைச் சேர்ந்த செல்வி சினேகா பாலமுருகன், இரண்டாம் பரிசைப் பெற்ற கனடா- ரொரன்ரோ நகரைச் சேர்ந்த செல்வி நிவேதிகா கோகுலன் மற்றும் மூன்றாம் பரிசைப் பெற்ற வட-இலங்கை கிளிநொச்சி நகரைச் சேர்ந்த கண்ணதாசன் லம்போதரன் ஆகியோர் காணப்படுகின்றனர். ஏனைய ஆறுதல் பரிசுகள் பெற்றொரின் பெயர் விபரங்கள் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.