LOADING

Type to search

மரண அறிவித்தல்

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி | அன்னலட்சுமி தங்கவடிவேலு

Share

எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீங்கள் அணைந்த நாளிலிருந்து எங்களின் வாழ்க்கை இருள் அடைந்து விட்டது.

எங்களின் பிரகாசமான வாழ்க்கைக்கு முதல்வியாகவும், எங்கள் குடும்பத்தின் ஆணி வேராகவும் இருந்தீர்கள். உங்களை இழந்த பின்பு வேர் அறுந்த மரங்களாக வாடி வதங்குகின்றோம். நீங்கள் இருந்த இடத்தை நிரப்புவதற்கு இங்கு எவரும் இல்லை இனிமேலும் வரப்போவதும் இல்லை.

உங்களை நினைத்து ஆறாத் துயரில் கண்ணீர் வடிக்கின்றோம். உங்களின் பெற்றோருக்கு சிறந்த மகளாகவும், உடன் பிறந்தோர்க்கு உண்மையான சகோதரியாகவும், கட்டிய கணவருக்கு
அன்பான மனைவியாகவும், பிள்ளைகளிற்கு பாசமான தாயாகவும், மருமக்களிற்கு அன்பான மாமியாகவும், பேரப்பிள்ளைகளிற்கு பாசம் மிகுந்த பாட்டியாகவும், பூட்டப்பிள்ளைகளிற்கு புன்னகை கலந்த, பாசமுள்ள பூட்டியாகவும், மாமன், மாமிக்கு சிறந்ததொரு மருமருகளாகவும், உறவினர் எல்லோருக்கும் அன்பான மச்சாள், மாமி, மணி அக்காவாகவும், விருந்தோம்பலில் சிறந்தவராகவும் வாழ்ந்து காட்டிய உங்களை காலன் கவர்ந்து சென்று ஆண்டு ஒன்று ஓடி மறைந்தது. நாங்களோ உங்களை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்திய வண்ணம் இருக்கின்றோம். உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

எங்கள் துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களிற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்:

தங்கவடிவேலு(விநாயகம்)(416 454 3234) கணவர்
பிள்ளைகள், மருக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.