LOADING

Type to search

கனடா சமூகம்

கனடிய நீதி அமைச்சரின் பாராளுமன்றச் செயலாளராக பதவியேற்கவுள்ள பாராளுமன்ற உ றுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Share

கனடிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடிய நீதி அமைச்சர் Honorable David Lametti. அவர்களின் பாராளுமன்றச் செயலாளராக விரைவில் பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார் என்றும் அவரது பதவியேற்பு வைபவம் விரைவில் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒரு மனித உரிமைகள் சார்ந்த சட்டத்தரணியாக பணியாற்றியும் மேலும் சமூக நீதிக்காக குரல் கொடுத்து வந்தவர் என்ற வகையில் தனது நீதித்துறை சார்ந்த இந்த அரசு சார்ந்த பதவியை சிறப்பாகச் செய்யக்கூடியவர் என்று உதயன் ஆசிரிய பீடத்தோடு தொடர்பு கொண்டு பேசிய சில தமிழ்அன்பர்கள் குறிப்பிட்டார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.