LOADING

Type to search

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் | திரு பிறேமச்சந்திரன் கந்தையா

Share

திரு பிறேமச்சந்திரன் கந்தையா
Mountain Financial Group Owner

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமச்சந்திரன் கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.

குடும்பத்தின் குல விளக்கே – எங்கள்
விழி நிகர்த்த பேருறவே
அன்பின் திருவுருவே – எம்மை
அணைத்துக் காத்த பெருமகனே
வழியேதும் தெரியாமல் – நாம்
விழி மூடி அழுகின்றோம்
உம் நினைவோடு நாம் வாழ்வோம்
நீடு துயில் செய்திடுக நிர்மலன் அடியில்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், எமது இல்லத்திற்கு நேரடியாக வந்து தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து சென்ற சிவாச்சாரியப் பெருமக்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 19-11-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் பி.ப 12:00 மணிவரை Canada Kanthaswamy Temple (733 Birchmount Rd., Scarborough, ON MIK IR5, Canada) நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதியபோசன நிகழ்விலும் கலந்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்