LOADING

Type to search

இலங்கை அரசியல்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மக்கள் வங்கி மன்னார் கிளையில் பெண்களுக்கான ‘வனிதா வாசனா’ சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது.

Share

(மன்னார் நிருபர்)

(8-03-2023)

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘மக்கள் வங்கி’ மன்னார் கிளையினால் இன்றைய தினம் புதன்கிழமை(8) பெண்களுக்கான ‘வனிதா வாசனா’ (Vanitha Vasana) சேமிப்பு கணக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் வங்கி மன்னார் கிளை முகாமையாளர் ஏ.கரிகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார்.

-இதன் போது பெண்கள் பலர் கலந்து கொண்டு வனிதா வாசனா சேமிப்பு கணக்கை திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் மக்கள் வங்கி மன்னார் கிளை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.