LOADING

Type to search

விளையாட்டு

ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே. 226 ரன்கள் குவிப்பு

Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்துள்ளது. சென்னை அணியில் டெவோன் கான்வே, ஷிவம் துபே ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்துள்ளனர். இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களுரு அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் இந்தப் போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்யா ரஹானேவுடன் இணைந்த டெவோன் கான்வே அதிரடியாக ரன்களை குவித்தார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஹானே37 ரன்களில் வெளியேற, அரைச்தம் கடந்த கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அம்பதி ராயுடு 14 ரன்களும், மொயின் அலி 19 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 10 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.