LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து! 10 பேர் பலி! 40 பேர் காயம்!

Share

(10-07-2023)

மன்னம்பிட்டி – கொத்தலிய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுரு வலையிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து நேற்று (09) இரவு 8 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 40 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்