LOADING

Type to search

இலங்கை அரசியல்

வெப்பமான காலநிலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு நீரை அதிகம் பருகக் கொடுங்கள்

Share

– குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவிப்பு

வட மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கே. அருள்மொழி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் தற்போது சூழல் வெப்பநிலை வழமையை விட அதிகரித்து உள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

குறித்த காலப் பகுதியில் குழந்தைகள் சிறுவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படுபதுடன் உடலில் பருக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இவ்வாறு பருக்கள் ஏற்படும் போது உடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் பெற்றோர்கள் சிறுவர்கள் குழந்தைகளின் உடல் சுத்தத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

தோலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உரிய வைத்திய ஆலோசனைகளை பெற வேண்டும்

ஆகவே வெப்பமான காலநிலையை எதிர்கொள்வதற்கு குடிநீரை அதிகம் பருகுவதுடன் கிருமி நாசினிகள் பாவிக்காத பழவகைகளை உண்ணுவது சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.