LOADING

Type to search

இலங்கை அரசியல்

தையிட்டி விகாரைக்கு தனியார் காணிகளை சுவீகரிபப்பதற்கு எதிராக போராட்டம்!

Share

பு.கஜிந்தன்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12-09-2023 மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து பௌத்த சிங்களமயமாக்கி, தமிழர்களின் சொந்த நிலத்தில் தமிழர்களை அகதிகளாக்கும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் இந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்காக தையிட்டி சட்டவிரோத விகாரையின் முன் தமிழர்களாய் திரள்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.