LOADING

Type to search

இலங்கை அரசியல்

கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில்

Share

வடமாகாணத்தைச் சேர்ந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியும் கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கான சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தியும், நிரந்தர நியமனத்தை வலியுறுத்தியும் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2013ம் ஆண்டு தொடக்கம் குறித்த கடவை காப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நாளார்ந்தம் 250 ரூபாக வீதம் மாதார்ந்தம் 7500ரூபா பெற்றுவருகின்றனர்.

தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள வட் வரியில் எப்படி வழமுடியும் எனவும், வாழ்நாளில் பாதிநாற்களில் பாதிவயிருடன் வழவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.