LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையிலிருந்து சென்ற ஐய்யப்ப பக்தர் விமானத்தில் மரணம்

Share

நடராசா லோகதயாளன்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன் னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்ற யாழ்பாணம் ஐயப்ப பக்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். தெல்லிபளையை சேர்ந்த ஐய்யப்ப பக் தரான மோகனதாஸ் (வயது 49) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

ஐய்யப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல 10ஆம் திகதி விமானத்தில் சென்னை சென்றபோது விமானம் நடுவானில் பறந்து சென்றபோது மோகனதாசுக்கு திடீ ரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல் நிலை மோசமானதால் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் விமானம் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி ஐய்யப்ப பக்தரை பரி சோதனை செய்தனர். அதில் மோகனதாஸ் விமான இருக்கை யிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த விமான நிலைய போலீசார் மோகனதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.நண்பர்களுடன் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல சென்ற மோகனதாஸ் இறந்ததால் அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் தமிழக போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.